உலகம்

பிரேசிலை உலுக்கிய புயல்: மின்சாரம் துண்டிப்பால் 13 லட்சம் வீடுகள் இருளில் தவிப்பு

Published On 2025-12-14 04:48 IST   |   Update On 2025-12-14 05:08:00 IST
  • மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 13 லட்சம் குடும்பங்கள் இருளில் சிக்கின.
  • இதன் காரணமாக பிரேசிலில் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது.

பிரேசிலியா:

பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் வெப்ப மண்டல புயல் உருவானது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் சுமார் 13 லட்சம் குடும்பங்கள் இருளில் சிக்கித் தவித்தன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு முடங்கியது.

அதேபோல், புயல் காரணமாக விமானங்கள் பறப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. எனவே 400 விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

Tags:    

Similar News