உலகம்

ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து - 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்

Published On 2023-08-08 16:53 GMT   |   Update On 2023-08-09 05:39 GMT
  • பாகிஸ்தானில் நடந்த ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.
  • ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து தொடர்பாக 6 ரெயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர்.

ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதன் காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து தொடர்பாக 6 ரெயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News