செய்திகள்

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 50 பேர் இறந்ததாக தகவல்

Published On 2019-04-23 11:20 GMT   |   Update On 2019-04-23 11:20 GMT
மியான்மர் நாட்டில் பச்சை மாணிக்கக் கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #50fearedkilled #Myanmarlandslide #Myanmarjademine #jademinelandslide
யாங்கூன்:

மியான்மர் நாட்டின் வடபகுதியில் உள்ள கச்சின் மாநிலத்தில் பச்சை மாணிக்கக் கற்களை வெட்டி எடுக்கும் சில சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.



அவற்றில் ஒரு சுரங்கத்தில் இன்று திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 55 தொழிலாளர்கள் சுரங்கத்தின் ஆழமான பகுதியில் இருந்தபோது ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் இறந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #50fearedkilled #Myanmarlandslide #Myanmarjademine #jademinelandslide
Tags:    

Similar News