செய்திகள்

சோமாலியாவில் அமைச்சக கட்டிடம் மீது கார்குண்டு தாக்குதல் - துணை மந்திரி உள்பட 6 பேர் பலி

Published On 2019-03-23 15:02 GMT   |   Update On 2019-03-23 15:02 GMT
சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் மீது இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். #carbombing #Mogadishucarbombing
மொகடிஷு:

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

அவ்வகையில், சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் பொதுப்பணித்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அலுவலகத்தின் மீது இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் தொழிலாளர் நலத்துறை துணை மந்திரி சக்கர் இபுராஹிம் அப்தல்லா உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 

பலத்த காயங்களுடன் பத்துக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இன்றைய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #carbombing #Mogadishucarbombing
Tags:    

Similar News