செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் உஷார்

Published On 2019-03-12 09:47 GMT   |   Update On 2019-03-12 10:48 GMT
இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. #Kashmir

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலகோட்டில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இச்சம்பவம் நடந்து 2 வாரம் ஆகிறது

இருந்தும் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி மற்றும் ராவல்பிண்டி ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் தனது ராணுவத்தை குவித்து வைத்துள்ளது.

அங்கு ‘எப்-16’ ரக போர் விமானங்கள் மற்றும் விமானப்படை வீரர்களும் பெருமளவில் தயாராக உள்ளனர். இந்த தகவலை அமெரிக்க செயற்கை கோள் எடுத்த போட்டோக்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மீண்டும் குண்டு வீசி சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அமெரிக்கா மற்றும் ஜோர்டானிடம் இருந்து வாங்கிய ‘எப்-16’ ரக போர் விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

மேலும் தனது வான் வழியில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத்தில் இருந்து வடக்கில் உள்ள ஸ்காடு வரை எல்லை பகுதியில் ராணும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு ரேடார் உள்ளிட்ட ராணுவ பாதுகாப்பு தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #Kashmir

Tags:    

Similar News