செய்திகள்
பிரேசிலில் அணை உடைந்து 7 பேர் பலி- 150 பேர் மாயம்
பிரேசிலில் அணை உடைந்து 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 150 பேரை காணவில்லை. இவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. #Brazildam
பிரேசிலியா:
பிரேசில் நாட்டில் புரு மாடின்கோ நகரம் அருகே ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கம் உள்ளது. அங்கு ஒரு அணை பயன்படுத்தப்படாமல் இருந்தது. நேற்று இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த அணை உடைந்தது.
உடனே அதில் இருந்த தண்ணீரும், சேறும் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறியது.
இச்சம்பவத்தில் இரும்புதாது சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் தவிர 150 பேரை காணவில்லை. இவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.