செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் ரெயில்கள் மோதல் - 4 பேர் பரிதாப பலி

Published On 2019-01-08 16:15 GMT   |   Update On 2019-01-08 16:15 GMT
தென் ஆப்பிரிக்காவில் ஒரே தண்டவாளத்தில் சென்ற இரண்டு ரெயில்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். #SouthAfrica #TrainAccident
ஜோகனஸ்பெர்க்:

தென்ஆப்பிரிக்காவில் பிரிடோரியா மற்றும் மபோபேன் பகுதிகளை இணைக்கும் வகையில் பயணிகள் ரெயில்கள்
இயக்கப்பட்டு வருகிறது. 

பிரிடோரியா மற்றும் மபோபேன் பகுதிகளை இணைக்கும் வழித்தடத்தில் இரண்டு ரெயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக இன்று மதியம் சென்று கொண்டிருந்தன. அதில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்தனர்.

இந்நிலையில், முன்னால் சென்று கொண்டிருந்த ரெயில் மீது பின்னால் வேகமாக வந்த ரெயில் மோதியது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தண்டவாளத்தில் ரெயில்கள் மோதிய விபத்தால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பயணிகள் ரெயில் விபத்து குறித்து அறிந்த தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமோபோசா. விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #SouthAfrica #TrainAccident
Tags:    

Similar News