செய்திகள்

பிரதமர் மோடியுடன் நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் முக்கிய ஆலோசனை

Published On 2019-01-08 09:27 GMT   |   Update On 2019-01-08 09:27 GMT
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். #PMModi #NorwegianPM #ErnaSolberg
புதுடெல்லி:

நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் நார்வே அரசின் உயரதிகாரிகள் குழுவும் வந்துள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் சிகப்பு கம்பளம் விரித்து, முப்படை அணிவகுப்பு மரியாதையுடன் நார்வே பிரதமருக்கு இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர்.



இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது, பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. பின்னர், எர்னா சோல்பர்க்,  நரேந்திர மோடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

நார்வே பிரதமருடனான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேலும் பலப்படுத்தும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்தது என்று குறிப்பிட்டார்.

பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை  எர்னா சோல்பர்க் சந்தித்து பேசினார். #PMModi #NorwegianPM #ErnaSolberg

Tags:    

Similar News