செய்திகள்

மியான்மரில் ஆம்புலன்ஸ் பஞ்சர் ஆன விபத்தில் 4 பேர் பலி

Published On 2018-12-25 10:30 GMT   |   Update On 2018-12-25 10:30 GMT
மியான்மர் நாட்டின் மன்டாலே பகுதியில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் டயர் பஞ்சர் ஆகி கார் நிறுத்தத்தின் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். #ambulancecrash #Myanmarambulancecrash
யாங்கூன்:

மியான்மர் நாட்டின் மன்டாலே பிராந்தியத்திற்குட்பட்ட யாங்கூன்-மன்டாலே பகுதி வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்து கொண்டிருந்தது. மைத்தியா நகரை நெருங்கியபோது அந்த ஆம்புலசின் ஒரு டயர் திடீரென்று வெடித்தது.

இதனால் தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் அருகாமையில் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்குள் பாய்ந்து சென்று மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த இருவர் அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #ambulancecrash #Myanmarambulancecrash
Tags:    

Similar News