செய்திகள்

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீ - பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

Published On 2018-11-13 09:38 GMT   |   Update On 2018-11-13 09:38 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 44 ஆக உயர்ந்துள்ளது. #CaliforniaFire #CaliforniacampFire
நியூயார்க்:

அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா மலையடிவாரத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ அம்மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளையும், அருகாமையில் உள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ளது.



அப்பகுதிகள் கடும் புகை மூட்டமாக உள்ளதால் தீயை அணைப்பது மீட்பு படையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. தீயில் வீடுகளை இழந்த பலர் குடும்பம் குடும்பமாக கார்கள் மூலம் தொலைவான இடத்துக்கு சென்று காருக்குள் தூங்கியபடி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கலிபோர்னியா வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீயாக கருதப்படும் நிலையில் கருகிய நிலையில் இன்று 13 பிரேதங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 5 நாட்களாக காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. #CaliforniaFire #CaliforniacampFire  
Tags:    

Similar News