செய்திகள்

மாஸ்கோவில் போர் விமானம் விபத்து - அதிஷ்டவசமாக விமானிகள் உயிர்தப்பினர்

Published On 2018-10-05 10:53 GMT   |   Update On 2018-10-05 10:53 GMT
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் போர் விமானம் விபத்தில் சிக்கியது. இதில், விமானிகள் இருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. #FlightCrash #MiG-29
மாஸ்கோ :

ரஷிய தலைநகர் மாஸ்கோவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சுகோவ்ஸ்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற மிக்-29 ரக போர் விமானம், விபத்துக்குள்ளாகி டிமிட்ரோஸ்கோவிய் எனும் கிராமத்திக்கு அருகே உள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் பயணம் செய்த விமானிகள் இரண்டு பேரும் வெளியே குதித்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். அவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரட்டை எஞ்சின்களை கொண்ட மிக்-29 போர் விமானத்தின் ஒரு எஞ்சினில் தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிக் ரக போர் விமானங்கள் 1982-ம் ஆண்டு முதல் ரஷிய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #FlightCrash #MiG-29
Tags:    

Similar News