செய்திகள்

அமெரிக்காவின் மேரிலான்ட்டில் உள்ள மருந்து பேக்டரியில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

Published On 2018-09-20 15:58 GMT   |   Update On 2018-09-20 15:58 GMT
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள மருந்து தயாரிக்கும் ஆலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர். #US #Maryland #RiteAid
நியூயார்க்:

அமெரிக்காவின் மேரிலான்ட் மாநிலத்தில் உள்ள ஹார்போர் கவுண்டி நகரில் ரைட் ஏய்ட் என்ற மருந்து உற்பத்தி ஆலை செயல்படுகிறது. உள்ளூர் நேரப்படி வியாழன் காலை அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், 3 பேரை சுட்டுக்கொன்றுள்ளான்.

மேலும், 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 1000 பணியாளர்கள் அங்கு இருந்து வரும் நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போலீஸ் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Tags:    

Similar News