செய்திகள்

மின்விநியோக குறைபாடு - மந்திரியை அதிரடியாக நீக்கம் செய்து ஈராக் பிரதமர் உத்தரவு

Published On 2018-07-29 11:09 GMT   |   Update On 2018-07-29 11:09 GMT
ஈராக் நாட்டில் பல்வேறு பகுதிகளில் முறையாக மின்விநியோகம் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் போராடியதை அடுத்து, மின்சாரத்துறை மந்திரியை நீக்கி, ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். #IraqPM #HaideralAbadi
பாக்தாத்:

ஈராக்கில் ஹைதர் அல் அபாடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீப காலங்களில் அதிக அளவில் மின்தடை ஏற்படுவதாகவும், மின்சாரத்துறையில் ஊழல் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக மின்துறை ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்து பிரதமர் உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது மின்சாரத்துறை மந்திரியான காசிம் அல் பக்தாவியை முறையாக பணி செய்யாதது மற்றும் ஊழல் காரணங்களுக்காக அதிரடியாக நீக்கம் செய்து பிரதமர் ஹைதர் அல் அபாடி உத்தரவிட்டுள்ளார். #IraqPM #HaideralAbadi
Tags:    

Similar News