செய்திகள்

பயங்கரவாதிகளின் சொர்க்கமாக பாக். இருப்பதை பொறுக்க முடியாது - நிக்கி ஹாலே

Published On 2018-06-28 11:47 GMT   |   Update On 2018-06-28 11:47 GMT
பயங்கரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் உருவாகிக் கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். #NikkiHaley
புதுடெல்லி :

ஐ.நா.விற்கான அமெரிக்க தூதரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான நேற்று நிக்கி இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டருடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றி பார்த்தார்.

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசினார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

பயங்கரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் உருவாகிக்கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதை பாகிஸ்தான் அரசிடமும் தொடர்புகொண்டு தெரிவித்துவிட்டோம் .

இந்தியா மற்றும் அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இனி வரும் காலங்களில் இதைவிட சிறப்பான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து ஈடுபட முடியும்.

மத சுதந்திரம் ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆகவே, இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் சகிப்புத்தன்மையை பின்பற்றுவதால் மட்டுமே ஒற்றுமையாக இருக்க முடியும்.

பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்கரி-லா பேச்சுவார்த்தையில் உரையாற்றும் போது, இந்திய பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான சரக்கு போக்குவரத்து மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என் தெரிவித்திருந்தார். இந்திய பசுபிக் பிராந்திய பாதுகாப்பில் மோடியின் பார்வையையே டிரம்ப்பும் கொண்டுள்ளார் என அவர் தெரிவித்தார். #NikkiHaley
Tags:    

Similar News