செய்திகள்

பொலிவியாவில் பாறையில் பேருந்து மோதி விபத்து - 12 பேர் பலி

Published On 2018-06-16 05:31 GMT   |   Update On 2018-06-16 05:31 GMT
பொலிவியாவில் பயணிகள் பேருந்து பாறை மீது மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். #BoliviaBusCrash
லா பாஸ்:

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் போட்டோசி அருகே நெடுஞ்சாலையில் நேற்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பெரிய பாறையில் மோதியது. இதில் பஸ்சின் முன்புறம் நொறுங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றதால் விபத்து  ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. #BoliviaBusCrash
Tags:    

Similar News