உலகம்
இந்தோனேசியாவில் சோகம்: அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலி
- ஜகார்த்தாவில் 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று அந்த அலுவலக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7 மாடி கட்டிடத்தில் தீ மளமளவென பரவியதால் வானத்தில் அடர்ந்த கரும்புகை எழுந்தது. இந்த கரும்புகை எழும்பியதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.