உலகம்

பாகிஸ்தானில் 17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை.. வீடுபுகுந்து மர்ம நபர் வெறிச்செயல்

Published On 2025-06-03 22:24 IST   |   Update On 2025-06-03 22:24:00 IST
  • இன்ஸ்டாகிராமில் மட்டும் சனாவுக்கு 500,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
  • சமூக ஊடகங்களில் தீவிரமாக இருந்ததற்காக சனாவை உறவினர்கள் எதிர்த்தனர்.

பாகிஸ்தானில் டிக்டாக் நட்சத்திரம் சனா யூசுப் (17) சுட்டுக் கொல்லப்பட்டார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத ஒரு ஆசாமி அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சித்ராலைச் சேர்ந்த சனாவுக்கு டிக்டோக்கில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவரது வீடியோக்கள் ஏராளமான பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளன. இன்ஸ்டாகிராமில் மட்டும் சனாவுக்கு 500,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. சமூக ஊடகங்களில் தீவிரமாக இருந்ததற்காக சனா தனது உறவினர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இது ஒரு கௌரவக் கொலை என்றும் சந்தேகிக்கப்படுதுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, குவெட்டாவைச் சேர்ந்த ஹிரா என்ற 15 வயது சிறுமி டிக்டோக்கில் தீவிரமாக இருந்ததற்காக அவரது தந்தை மற்றும் மாமாவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2016 ஆம் ஆண்டில், சமூக ஊடக நட்சத்திரம் கந்தீல் பலோச் அவரது சகோதரரால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Tags:    

Similar News