தமிழ்நாடு செய்திகள்

கூட்டணியில் இருந்து விலகல்.. டிடிவி தினகரன், ஓபிஎஸ் முடிவை மறுபரிசீலனை செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்

Published On 2025-09-04 22:47 IST   |   Update On 2025-09-04 22:47:00 IST
  • கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனிடம் தொலைபேசியில் பேசினேன்.
  • கூட்டணியில் பிரச்சினைக்குரியவர்கள் இருக்கிறார்கள்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது.

இதற்கிடையே அக்கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார். முன்னதாக ஓ.பன்னீர் செல்வமும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனிடம் தொலைபேசியில் பேசினேன். அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டேன். அவர் அதை செய்வார் என்று நம்புகிறேன்.

பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

கூட்டணியில் பிரச்சினைக்குரியவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் கட்சி மேலிடம் மீது எனக்கு அதிருப்தி இல்லை. கூட்டணியில் இருக்கும் சின்ன சின்ன பிரச்சினைகள் தீரும் என நம்புகிறேன் " என்றார்.

Tags:    

Similar News