தமிழ்நாடு செய்திகள்

பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல்: ஏதும் தவறவில்லை- அஜித் தோவல்

Published On 2025-07-11 14:52 IST   |   Update On 2025-07-11 14:52:00 IST
  • பாகிஸ்தான் இதைச் செய்தது என்றும், இன்னும் பலவற்றைச் செய்தது என்றும் அவர்கள் சொன்னார்கள்.
  • இந்தியாவிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதை காட்டும் ஒரு படம் அல்லது புகைப்படத்தை என்னிடம் சொல்ல முடியுமா?

சென்னை ஐஐடி-யில் 62-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து அஜித் தோவல் கூறியதாவது:-

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதில் ஏதும் தவறவில்லை.

எல்லைத் தாண்டிய மிரட்டலை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. தொழில்நுட்ப வசதி திறனும் உள்ளது.

அதன் பிறகு, பாகிஸ்தான் இதைச் செய்தது என்றும், இன்னும் பலவற்றைச் செய்தது என்றும் அவர்கள் சொன்னார்கள். இந்தியாவிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதை காட்டும் ஒரு படம் அல்லது புகைப்படத்தை என்னிடம் சொல்ல முடியுமா?

இவ்வாறு அஜித் தோவல் கூறினார்.

Tags:    

Similar News