தமிழ்நாடு செய்திகள்
4 மண்டலங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
- நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
- பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அண்ணா நகர் மண்டலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 24-ந் தேதி காலை 8 மணி முதல் 25-ந் தேதி காலை 8 மணி வரை தண்டையார்பேட்டை மண்டலம்-4, ராயபுரம் மண்டலம்-5, புரசைவாக்கம்,
பெரியமேடு, சௌகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, திரு.வி.க நகர் மண்டலம்-6, ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், அண்ணா நகர் மண்டலம்-8, கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், தேனாம்பேட்டை மண்டலம்-9, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.