தமிழ்நாடு செய்திகள்

பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் - விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்

Published On 2025-07-19 14:31 IST   |   Update On 2025-07-19 14:31:00 IST
  • எம்.பி. விஜய் வசந்த் CSR நிதி மூலம் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்து, அதற்கான நிதி சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டார்.
  • ரவுண்ட் டேபிள் இந்தியா என்ற அமைப்பு ரூ.25 லட்சம் செலவில் கட்டிடம் கட்டி தர முன் வந்ததையடுத்து பணிகள் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

எம்.பி. விஜய் வசந்த் இதற்காக CSR நிதி மூலம் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்து, அதற்கான நிதி சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டார்.

கோவையை சேர்ந்த ரவுண்ட் டேபிள் இந்தியா என்ற அமைப்பு ரூ.25 லட்சம் செலவில் கட்டிடம் கட்டி தர முன் வந்ததையடுத்து பணிகள் நடைபெற்றது.

 

இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகள் இன்று திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா குத்துவிளக்கு ஏற்ற, விஜய் வசந்த் எம்.பி. வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

மாணவர்கள் பயில இந்த சேவையை செய்ய முன்வந்த ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பிற்கு விஜய் வசந்த் எம்.பி. விழாவில் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News