தமிழ்நாடு செய்திகள்

விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை..!- உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்

Published On 2025-10-03 16:22 IST   |   Update On 2025-10-03 16:27:00 IST
  • தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடுமையான கண்டனத்தை இந்த நீதிமன்றம் தெரிவிக்கிறது.
  • கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.

கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாட கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கூறியதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடுமையான கண்டனத்தை இந்த நீதிமன்றம் தெரிவிக்கிறது. கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.

தவெக தலைவர் விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை. பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் சம்பவம் நடந்ததும் தொண்டர்களையும், அவர்களை பின் தொடர்பவர்களையும் கைவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டனர்.

கரூர் துயரத்தில் அனைத்துக் கட்சிகளும் மீட்புப் பணியில் இருந்தபோது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மொத்தமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

ஒரு கட்டுப்படுத்தப்படாத கலவரம்போல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அரசு கருணை காட்டுகிறதா?

இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News