தமிழ்நாடு செய்திகள்

முருகனே வந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை காப்பாற்ற முடியாது! வன்னி அரசு

Published On 2025-06-07 12:25 IST   |   Update On 2025-06-07 12:25:00 IST
  • தமிழ்நாட்டில் ராமனை விட முருகனே தம்மை காப்பாற்றுவார் என நம்புகிறது.
  • தமிழ்நாட்டு மக்களின் எந்த உரிமைகளுக்கும் மாநாடோ பொதுக்கூட்டமோ நடத்தாத பாஜக, ஓட்டுக்காக மதவெறி அரசியலை முன்னெடுக்கிறது.

சென்னை :

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

வட இந்தியாவில் ராமரை வைத்து அரசியல் செய்த பாஜக, ஒடிசாவில் ராமருக்கு பதிலாக ஜெய் ஜெகநாத் என முழங்கி பிழைப்புவாதம் செய்தது.

கேரளாவில் நாராயண குருவிடம் மண்டியிட்ட பாஜக தமிழ்நாட்டில் முருகனிடம் சரணாகதி அடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் ராமனை விட முருகனே தம்மை காப்பாற்றுவார் என நம்புகிறது.

அதனால் தான் முருக பக்தர்கள் மாநாட்டை பாஜக ஒருங்கிணைக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் எந்த உரிமைகளுக்கும் மாநாடோ பொதுக்கூட்டமோ நடத்தாத பாஜக, ஓட்டுக்காக மதவெறி அரசியலை முன்னெடுக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் முருகனை வணங்குவார்கள். ஆனால், பாஜகவின் மதவாதத்துக்கு தலைவணங்க மாட்டார்கள். முருகனே பாஜகவில் சேர்ந்தாலும் பாஜகவை காப்பாற்ற முடியாது.

முருகன் மீது பாஜகவுக்கு உண்மையலேயே பக்தி இருந்தால், முருகன் சாதி மறுப்பு திருமணம் செய்தது போல,

சாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்து தீர்மானம் இயற்ற தயாரா?

சாதி மறுப்பு திருமணங்கள் செய்வோரை ஆணவப்படுகொலை செய்யும் பயங்கரவாதத்தை கண்டிக்கத்தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.



Tags:    

Similar News