தமிழ்நாடு செய்திகள்

விஜய் அண்ணாவ பாத்தே ஆகணும்.. கண்ணீருடன் மாநாட்டுக்கு புறப்பட்ட கர்ப்பிணி பெண்

Published On 2025-08-21 10:57 IST   |   Update On 2025-08-21 10:58:00 IST
  • தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடக்கிறது.
  • கர்ப்பிணிகள், மாணவர்கள், முதியவர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டார்.

புதுக்கோட்டை:

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப் பத்தி பகுதியில் இன்று நடை பெறுகிறது.

பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு கர்ப்பிணிகள், மாணவர்கள், முதியவர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து கர்ப்பிணி பெண் தனது மகனுடன் மாநாட்டுக்கு புறப்பட்டுள்ளார். மாநாட்டிற்கு வர வேண்டாம் என நிர்வாகிகள் வலியுறுத்தியும் எப்படியாவது விஜயை பார்த்தாக வேண்டும், தனக்கு ஒன்றும் நிகழாது என அந்த பெண் கண்ணீருடன் கூறினார்.

Tags:    

Similar News