தமிழ்நாடு செய்திகள்
'கடவுளே அஜித்தே' கோஷத்தால் குழம்பி போன டிடிவி தினகரன்
- டிடிவி தினகரன் திருப்பூரில், மாரத்தான் போட்டி பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.
- நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் ’கடவுளே அஜித்தே’ என கோஷம் எழுப்பினர்
திருப்பூரில் மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரிசுகளை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பினர்
இதனால், டிடிவி தினகரன் ஒருநிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என நிர்வாகிகளிடம் கேட்டார். பிறகு கோஷம் ஓய்ந்தபிறகு பேச்சை தொடர்ந்தார்.
சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே அஜித்தே" என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.