தமிழ்நாடு செய்திகள்

துணை பொதுச்செயலாளராக எனது கடமைகள் மேலும் வேகமாக தொடரும்- திருச்சி சிவா

Published On 2025-04-11 14:17 IST   |   Update On 2025-04-11 14:17:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருச்சி சிவா நன்றி தெரிவித்தார்.
  • இதுவரை எதையும் நான் கேட்டுப் பெற்றதில்லை, தானாகவே தந்துள்ளார்கள்.

சென்னை:

அமைச்சர் பொன்முடியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருச்சி சிவா நன்றி தெரிவித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, கழகத்தைப் பொறுத்தவரை உழைப்புக்கு என்றும் அங்கீகாரம் உண்டு. இதுவரை எதையும் நான் கேட்டுப் பெற்றதில்லை, தானாகவே தந்துள்ளார்கள்.

தலைவர் கொடுத்துள்ள அங்கீகாரம் என்பது நான் இன்னும் கடுமையாக இந்த இயக்கத்திற்காக உழைத்து இன்னும் பல தோழர்களை இந்த இயக்கத்தில் இணைத்து திராவிட முன்னேற்ற கழகம் என்கிற இந்த தவிர்க்க முடியாத சக்தி மேலும் வலிமை பெற உழைப்பதே எனது கடமை. பொறுப்பு வருகிறபோதே அதனுடன் கடமைகளும் அதிகமாக வருகின்றன என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். எனது கடமைகள் மேலும் வேகமாக தொடரும் என்றார். 

Tags:    

Similar News