சென்னையில் நாளை (12.09.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- வரதராஜபுரம், பனிமலர் மருத்துவக் கல்லூரி, பெங்களூரு டிரங்க் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (12.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பாலவாக்கம்: காமராஜர் சாலை மற்றும் மெயின் ரோடு, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1 மற்றும் 2வது தெரு, கந்தசாமி நகர் 1 முதல் 7வது தெரு.
பூந்தமல்லி: வரதராஜபுரம், பனிமலர் மருத்துவக் கல்லூரி, பெங்களூரு டிரங்க் ரோடு, பனிமலர் பொறியியல் கல்லூரி, நசரத்பேட்டை, மேப்பூர், மலையம்பாக்கம், அகரமேல்.
திருமங்கலம்: மெட்ரோ சோன், சத்திய சாய் நகர், பாடிகுப்பம் மெயின் ரோடு, டிஎன்எச்பி குவார்ட்டர்ஸ், பழைய பென், கோல்டன் ஜூபிலி பிளாட்ஸ், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், விஜிஎன், அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், ரெயில் நகர், மாட வீதிகள், சிவன் கோவில் தெரு, சீனிவாசன் நகர், 100 அடி சாலை, நியூ காலனி மற்றும் மேட்டுக்குளம்.
எழும்பூர்: ஈவிகே சம்பத் சாலை, ஜெர்மையா சாலை, ரிதர்டன் சாலை மற்றும் சந்து, சர்ச் லேன், பாலர் கல்வி நிலையம், சிஎம்டிஏ, மெரினா டவர், வெனல்ஸ் சாலை, பிசிஓ சாலை, விபி ஹைல், பிக்னிக் ஹோட்டல், வால்டாக்ஸ் சாலை, பார்க் டவுன், வரதராஜன் தெரு, சந்தோஷ் நகர், பிரகின்பாட் சாலை, எச். சிங்கர் தெரு, சுப்பையா தெரு, பேரக்ஸ் சாலை, சைடன்ஹாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கரை வீர பத்திரன் தெரு, காட்டூர் சடையப்பன் தெரு, முத்து கிராமணி தெரு, சர்ச் சாலை, ஜெரேமியா சாலை.