தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை (09.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

Published On 2025-05-08 13:02 IST   |   Update On 2025-05-08 13:02:00 IST
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
  • மேட்டுக்குப்பம், ஏஜிஆர். கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் பிற பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

சென்னை:

சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் நாளை (09.05.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி, பட்டாபிராம் பகுதிகள், சிடிஎச் சாலை, திருவள்ளுவர் நகர், கக்கன்ஜி நகர், சத்திரம், காமராஜபுரம், சோழன் நகர், ஐயப்பன் நகர், விஜிவி நகர், கண்ணப்பாளையம், தனலட்சுமி நகர், விஜிஎன் 2 முதல் 7 வரை, மேல்பாக்கம்.

மேலும், வள்ளுவர்சாலை, பஜனை கோவில், அரசமரம் சந்திப்பு, ஆனந்தம்நகர், பாரதி சாலை, டி.என்.எச்.பி., ஸ்ரீராம் நகர், சபரி நகர், தமிழ் நகர், குறிஞ்சி நகர், கங்கை அம்மன் கோவில் சாலை, அம்பாள் நகர், ரத்தின வளாகம், பிரகாசம் தெரு, செந்தமிழ் நகர், சாலரங்கம், சத்ரியர் நகர், கொத்தரை நகர், கலசத்தம்மன் கோவில் தெரு, ராயலா நகர், எஸ்ஆர்எம் திருமலை நகர், பெரியார் சாலை, குரு ஹோம்ஸ், நேரு நகர், பொன்னம்மாள் நகர், ராஜீவ் காந்தி நகர், காமராஜர் சாலை, கங்கை அவென்யூ, சாந்தி நகர், மவுன்ட் பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் மெயின் ரோடு, கமலா நகர், சுபஸ்ரீ நகர், எம்.கே.எம். நகர், கிருஷ்ணா நகர், ராம்னி கோவில், மாரியம்மன் கோவில், எம்.கே.எம். குருசாமி நகர், சிஆர்ஆர் புரம், காவ்யா கிராண்டன், காசா கிராண்டா, ஆறுமுகம் நகர், திருநகர், கணேஷ் நகர், மணப்பாக்கம் கிராமம், ராமமூர்த்தி அவென்யூ, ஏவி மல்லிஸ் கார்டன், டிரைமேக்ஸ், விவி கோவில் தெரு, பெருமாள் தெரு, ஏஜிஎஸ் காலனி, மேட்டுக்குப்பம், ஏஜிஆர். கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் பிற பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News