தமிழ்நாடு செய்திகள்

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடுரோட்டில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஜவுளி வியாபாரி

Published On 2025-05-14 13:17 IST   |   Update On 2025-05-14 13:17:00 IST
  • அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டபடி அங்கிருந்து தப்பித்து ஓடினார்.
  • விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

சேலம்:

சேலம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் சேலத்தில் தங்கி இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ படிப்பு சம்பந்தமான பயிற்சிக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

நேற்று இரவு பயிற்சி முடிந்ததும் வள்ளுவர் சிலை அருகே உள்ள அவர் தங்கி இருக்கும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இரவு 9.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மொபட்டில் பின்னால் வந்த ஒரு நபர் திடீரென அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டபடி அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

தொடர்ந்து டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற டவுன் போலீசார் அவரை பிடித்து டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த சண்முகநாதன் (வயது 44) என்பதும் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருவதும், மேலும் தள்ளு வண்டியில் வைத்து துணி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News