அனகாபுத்தூர் அருகே கால் டாக்சி விபத்து - கர்ப்பிணி, தந்தை உயிரிழப்பு
- தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில், கால் டாக்சி மீது எதிர்திசையில் வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
- மதுபோதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டனை சிட்லபாக்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை அனகாபுத்தூர் அருகே பைபாஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் கர்ப்பிணி, அவரது தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில், கால் டாக்சி மீது எதிர்திசையில் வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டாக்சியில் இருந்த தந்தை, கர்ப்பிணி மகள் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்த பத்மநாபனின் மனைவி, ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கார் விபத்தில் உயிரிழந்தவர்கள் வேங்கைவாசல் மகராஜபுரத்தை சேர்ந்த பத்மநாபன் (58), கர்ப்பிணியாக இருந்த அவரது மகள் தீபிகா (21) என்பது தெரிய வந்துள்ளது.
மதுபோதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டனை சிட்லபாக்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கார் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகவும், எதிர்திசையில் காரை ஓட்டி வந்ததும் விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.