தமிழ்நாடு செய்திகள்

சக்திகாந்த தாஸ் நலமுடன் உள்ளார்- மருத்துவமனை நிர்வாகம் தகவல்

Published On 2024-11-26 10:35 IST   |   Update On 2024-11-26 10:35:00 IST
  • சென்னை வந்திருந்த அவர் ரிசர்வ் வங்கி குடியிருப்பில் தங்கி இருந்தார்.
  • அஜீரண கோளாறு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ். சென்னை வந்திருந்த அவர் ரிசர்வ் வங்கி குடியிருப்பில் தங்கி இருந்தார்.

நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நலமாக உள்ளார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜீரண கோளாறு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News