தமிழ்நாடு செய்திகள்

சென்னை தரமணி- திருவான்மியூர் சாலையில் திடீர் பள்ளம்: விபத்தில் சிக்கிய கார்

Published On 2025-05-17 19:56 IST   |   Update On 2025-05-17 19:56:00 IST
  • மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவில் நிலையில் மறுப்பு.
  • பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, திருவான்மியூர்- தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தரமணி- திருவான்மியூர் சாலையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில், வெள்ளை நிற கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதற்கிடையே, மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவில் நிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகளுக்கும் இந்த விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது ஏற்பட்ட பள்ளம் நடைபெறும் இடத்திற்கு அருகே கழிவுநீர் கால்வாய் அமைப்பு தான் உள்ளது. அதனால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு மெட்ரோ ரெயில் பணி காரணம் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News