தமிழ்நாடு செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
- கடுமையாக தாக்கி, படகுகளை மோத வைத்து சேதம் ஏற்படுத்தியதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கடுமையாக தாக்கி, வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாகவும், படகுகளை மோத வைத்து சேதம் ஏற்படுத்தியதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் சுமார் 75 பேருக்கு மேல் சிறையிலும் 32 மீனவர்கள் நீதிமன்ற காவலிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.