தமிழ்நாடு செய்திகள்
null

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

Published On 2025-07-22 07:01 IST   |   Update On 2025-07-22 07:27:00 IST
  • கைதான மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது.
  • இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை

தலைமன்னார் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துதுள்ளனர்.

Tags:    

Similar News