தமிழ்நாடு செய்திகள்
மண்டல பூஜை, மகர விளக்கு: சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
- நவம்பர் 16 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்.
- சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
கார்த்திகை மாதம் 1ஆம் தேதி அடுத்த மாதம் 17ஆம் தேதி தொடங்குகிறது. கார்த்திகை 1ஆம் தேதி சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்வார்கள். மண்டல பூஜை, மகர விளக்கை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள்.
அவர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நவம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி இரண்டு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. டிசம்பர் 27 முதல் 30 வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுவதால் அன்றைய தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.