தமிழ்நாடு செய்திகள்

தோல்வியே காணாதவர் எம்.ஜி.ஆர்... வெற்றியே காணாதவர் இ.பி.எஸ். - செங்கோட்டையன் விமர்சனம்

Published On 2025-11-01 11:34 IST   |   Update On 2025-11-01 12:01:00 IST
  • புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாராட்டுகளை பெற்றவன்.
  • இரவு, பகல் பாராமல் ஜெயலலிதா கைகாட்டிய திசையில் பயணித்தவன்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் இருந்து செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாராட்டுகளை பெற்றவன்.

* இரவு, பகல் பாராமல் ஜெயலலிதா கைகாட்டிய திசையில் பயணித்தவன்.

* இந்த இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அயராமல் பணியாற்றினேன்.

* அ.தி.மு.க. உடைந்து விடக்கூடாது என்பதற்காக தான் 2 முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.

* தோல்வியே காணாதவர் எம்.ஜி.ஆர். இ.பி.எஸ். எடுத்த முடிவுகளால் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது.

* ஒரு முறை தோற்றால் மறுமுறை வரலாற்று வெற்றி பெறுவார் ஜெயலலிதா.

* இ.பி.எஸ்.-க்கு பதவி கிடைப்பதற்கான பரிந்துரைக் கடிதம் கொடுத்தவன் நான்.

* பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் தேர்தல் களத்தில் வெற்றியை காணாதவர் இ.பி.எஸ்.

* கட்சி ஒருங்கிணைய வேண்டும் என நாங்கள் 6 பேர் இணைந்து இ.பி.எஸ்.யிடம் பேசினோம்.

* வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கட்சி ஒருங்கிணைய வேண்டும் என்று இ.பி.எஸ்.யிடம் பேசினேன்.

* கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எங்களது கருத்துக்களை எடுத்து வைத்தோம்.

* அ.தி.மு.க வலிமையாக இருக்க வேண்டும் என்பது எனது நோக்கமாக இருக்கிறது.

* தேவர் ஜெயந்திக்கு சென்றபோதும் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தான் பேசினேன்.

* தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதற்கான பரிசுதான் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News