தமிழ்நாடு செய்திகள்
கட்சியில் தொண்டனாக இருந்து பணியாற்றுவேன் - செங்கோட்டையன்
- மே தின நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
- 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்.
ஈரோடு மாவட்டம் ஆசனூரில் அ.தி.மு.க. சார்பில் மே தின நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* என்னை பொறுத்தவரை கட்சியில் தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.
* இந்த இயக்கம் மண்ணிலே வளர வேண்டும். இயக்கத்தில் இருப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். அப்போது தான் நமது கண்ணீர் துடைக்கப்படும்.
* வேலைவாய்ப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும். தொழிலாளர்கள் நலன் காக்கப்படும். விவசாயிகள் நலன் காக்கப்படும்.
* 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.