சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றது தான் சுயமரியாதையா? - இ.பி.எஸ்.க்கு சீமான் கேள்வி
- திராவிட கட்சியான அ.தி.மு.க.விற்கு ஆரியரான ஜெயலலிதா தலைவரானது எப்படி?
- சுயமரியாதை என்ற சொல்லை உச்சரிக்க தி.மு.க., அ.தி.மு.க.விற்கு தகுதி இருக்கிறதா?
சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எது சுயமரியாதை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து உள்ளார். அப்போது அவர் பேசியதாவது:
* துணை முதலமைச்சர் காலில் அவர் வயதை ஒத்தவர் விழுவது தான் சுயமரியாதையா?
* சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றது தான் சுயமரியாதையா?
* திராவிடம் என்றால் ஆரியத்திற்கு எதிரான கோட்பாடு என கூறினார்கள்.
* திராவிட கட்சியான அ.தி.மு.க.விற்கு ஆரியரான ஜெயலலிதா தலைவரானது எப்படி?
* ஜெயலலிதா திராவிட கட்சிக்கு தலைமை ஏற்றபோது திராவிடம் என்ன ஆனது?
* ஜெயலலிதா முன் நிமிர்ந்து நின்று அ.தி.மு.க.வினர் யாராவது பேசியது உண்டா?
* கார் டயரை விழுந்து கும்பிட்டது என்ன சுயமரியாதை?
* எனது மாமனார் காளிமுத்து மட்டும் நிமிர்ந்து நின்று பேசுவார்.
* சுயமரியாதை என்ற சொல்லை உச்சரிக்க தி.மு.க., அ.தி.மு.க.விற்கு தகுதி இருக்கிறதா?
இவ்வாறு அவர் பேசினார்.