தமிழ்நாடு செய்திகள்

சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றது தான் சுயமரியாதையா? - இ.பி.எஸ்.க்கு சீமான் கேள்வி

Published On 2025-11-02 10:24 IST   |   Update On 2025-11-02 10:24:00 IST
  • திராவிட கட்சியான அ.தி.மு.க.விற்கு ஆரியரான ஜெயலலிதா தலைவரானது எப்படி?
  • சுயமரியாதை என்ற சொல்லை உச்சரிக்க தி.மு.க., அ.தி.மு.க.விற்கு தகுதி இருக்கிறதா?

சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எது சுயமரியாதை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து உள்ளார். அப்போது அவர் பேசியதாவது:

* துணை முதலமைச்சர் காலில் அவர் வயதை ஒத்தவர் விழுவது தான் சுயமரியாதையா?

* சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றது தான் சுயமரியாதையா?

* திராவிடம் என்றால் ஆரியத்திற்கு எதிரான கோட்பாடு என கூறினார்கள்.

* திராவிட கட்சியான அ.தி.மு.க.விற்கு ஆரியரான ஜெயலலிதா தலைவரானது எப்படி?

* ஜெயலலிதா திராவிட கட்சிக்கு தலைமை ஏற்றபோது திராவிடம் என்ன ஆனது?

* ஜெயலலிதா முன் நிமிர்ந்து நின்று அ.தி.மு.க.வினர் யாராவது பேசியது உண்டா?

* கார் டயரை விழுந்து கும்பிட்டது என்ன சுயமரியாதை?

* எனது மாமனார் காளிமுத்து மட்டும் நிமிர்ந்து நின்று பேசுவார்.

* சுயமரியாதை என்ற சொல்லை உச்சரிக்க தி.மு.க., அ.தி.மு.க.விற்கு தகுதி இருக்கிறதா?

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News