தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூர், தஞ்சாவூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Published On 2025-10-21 22:43 IST   |   Update On 2025-10-21 22:43:00 IST
  • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
  • பல்வேறு மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (22-10-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News