சிபிஐ விசாரணை வேண்டும் - இ.பி.எஸ்.-ஐ சந்தித்த பின்பு ரிதன்யாவின் தந்தை பேட்டி
- மாமியார் சித்ராதேவியை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
- ரிதன்யாவிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாதுரை கூறுகையில்,
வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்கு காங்கிரஸ் தரப்பில் முயற்சி நடைபெறுகிறது. இந்த வழக்கு தொடர்பாக கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகிய 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மாமியார் சித்ராதேவியை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். கவின்குமாரின் தாத்தா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கட்சி தலையிடுகின்றனர். காவல்துறையினரின் செயல்பாடு சரியில்லை. அலைக்கழிக்கிறார்கள். சிபிஐ விசாரணை வேண்டும். ரிதன்யாவிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.