தமிழ்நாடு செய்திகள்

என்ஜினீயரிங் கலந்தாய்வு: மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு

Published On 2025-06-11 20:26 IST   |   Update On 2025-06-11 20:26:00 IST
  • இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக ஆர்வம் காட்டும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது.

விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. நடப்பாண்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், என்ஜினீயரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News