தமிழ்நாடு செய்திகள்

அன்புமணி எனது பெயரை பயன்படுத்தக்கூடாது- ராமதாஸ்

Published On 2025-07-10 13:19 IST   |   Update On 2025-07-10 13:43:00 IST
  • 5 வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக கூறிவருகின்றனர்.
  • தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.

கும்பகோணம்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பா.ம.க.வை வழிநடத்துவது யார்? என்பதில் இருவரும் பிடிவாதமாக உள்ளனர். கட்சியை கையகப்படுத்த இருவரும் தலைமைத் தேர்தல் ஆணையத்தையும் நாடி உள்ளனர். பொதுக்குழுவை கூட்டி, எடுக்கும் முடிவுகள் அடிப்படையில் பா.ம.க.வின் எதிர்காலம் அமையும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் கும்பகோணத்தில் இன்று பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூடியது. அக்கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

அப்போது டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

5 வயது குழந்தையாகிய நான்தான் 3 வருடங்களுக்கு முன்பு அன்புமணியை பா.ம.க.வின் தலைவராக ஆக்கினேன். அன்புமணி தனது பெயருக்கு பின்னால் என் பெயரை பயன்படுத்தக்கூடாது. என் பேச்சைக் கேட்காதவர்கள் எனது பெயரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். தேவையென்றால் அன்புமணி எனது பெயரை இன்ஷியலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News