தமிழ்நாடு செய்திகள்

போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது! - ரிப்பன் மாளிகை முன் பரபரப்பு

Published On 2025-08-14 00:04 IST   |   Update On 2025-08-14 00:04:00 IST
  • போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

சென்னையில் உள்ள இரண்டு மண்டல (5 மற்றும் 6) தூய்மை பணிகளை தனியாருக்கு விட்டதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையில் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அமைச்சர் சேகர்பாபு, கே.என். நேரு, மேயர் பிரியா உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்கள் போராட்டக்குழு நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாக  குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்.

தங்கள் உரிமைகளை கோரி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News