தமிழ்நாடு செய்திகள்

வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு- சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2025-04-12 16:54 IST   |   Update On 2025-04-12 16:54:00 IST
  • மத்திய பாஜக அரசை கண்டித்து 700க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கோஷமிட்டு போராட்டம்.
  • அம்பானிக்காக ஜனநாயகத்தை சாகடித்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கண்டன போராட்டம்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, மத்திய பாஜக அரசை கண்டித்து 700க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது, அம்பானிக்காக ஜனநாயகத்தை சாகடித்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கண்டன கோஷமிட்டனர்.

Tags:    

Similar News