தமிழ்நாடு செய்திகள்

விஜய் வீட்டில் செருப்பு வீசியவர் கைது

Published On 2025-02-26 09:31 IST   |   Update On 2025-02-26 09:31:00 IST
  • த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
  • 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பங்கேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளதை அடுத்து, விஜய் வீட்டில் மர்ம பொருள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விஜய் வீட்டில் செருப்புடன் மர்ம பொருளை வீசிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி செருப்பு வீசியவர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த விஜய் ரசிகர் என்று தகவல் வெளியாகி உள்ளது. போதையில் விஜய் வீட்டிற்குள் செருப்பை வீசியதாக தகவல். கைதானவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News