தமிழ்நாடு செய்திகள்

ஓ.பி.எஸ்., அப்போது செய்த தவறுக்கு இப்போது அனுபவிக்கிறார்- வைகோ

Published On 2025-11-07 12:37 IST   |   Update On 2025-11-07 12:37:00 IST
  • ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
  • நான் அதிமுக கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார்கள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2011-ம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 12 இடங்கள் தான் தருவோம் என கூறினார்கள்.

ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

நான் அதிமுக கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார்கள்.

கூட்டணிக்கு மதிமுக வர தயாராகவில்லை என ஜெயலலிதாவிடம் தவறாக கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்; ஜெயலலிதா 15 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது.

அப்போது ஓபிஎஸ் செய்த தவறுக்காகத்தான் அதன் பலனை தற்போது அனுபவித்து கொண்டு இருக்கிறார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News