தமிழ்நாடு செய்திகள்

கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன்: 5 பேரின் கதி என்ன?

Published On 2025-05-17 18:31 IST   |   Update On 2025-05-17 19:36:00 IST
  • வெள்ளாவன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக 8 பேரும் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
  • கார் வேகமாக பாய்ந்ததில், கிணற்றுக்குள் கார் இழுத்துச் சென்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 8 பேருடன் கிணற்றுக்குள் ஆம்னி கார் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெள்ளாவன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக ஒரு குழந்தை உள்பட 8 பேரும் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

கார் வேகமாக பாய்ந்ததில், கிணற்றுக்குள் கார் இழுத்துச் சென்றுள்ளது.

இந்த காரில் 8 பேர் பயணித்ததாகவும், அவர்கள் காருக்குள் சிக்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதில் 3 பேர் தண்ணீரில் நீந்தி தப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், கிணற்றுக்குள் சிக்கியுள்ள 5 பேரின் நிலை என்ன என்பது குறித்து தகவல் இல்லை. அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News