தமிழ்நாடு செய்திகள்

செங்கோட்டையனை கண்டிப்பாக சந்திப்பேன்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2025-09-07 11:19 IST   |   Update On 2025-09-07 11:19:00 IST
  • நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர்.
  • செங்கோட்டையன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு ஆதரவு உண்டு.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச தயாராக உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

* நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர். அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

* முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கண்டிப்பாக சந்திப்பேன்.

* ஒருங்கிணைப்பு தொடர்பான 10 நாட்கள் கெடு முடிந்ததும் செங்கோட்டையன் தன்னிடம் பேசுவார் என நம்பிக்கை உள்ளது.

* அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

* செங்கோட்டையன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு ஆதரவு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News