தமிழ்நாடு செய்திகள்

செங்கோட்டையனுக்கு உறுதுணையாக இருப்பேன்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2025-09-05 11:10 IST   |   Update On 2025-09-05 11:10:00 IST
  • செங்கோட்டையன் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் தனக்கு சம்மதம்.
  • அனைவரும் ஒன்றானால்தான் அ.தி.மு.க. ஆட்சியில் அமரும் என்று உறுதியாக நம்புகிறோம்.

பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி உள்ளார். செங்கோட்டையனின் கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,

* பிரிந்தவர்களை ஒன்றிணைக்க முயலும் செங்கோட்டையனுக்கு உறுதுணையாக இருப்பேன்.

* செங்கோட்டையன் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் தனக்கு சம்மதம்.

* அனைவரும் ஒன்றானால்தான் அ.தி.மு.க. ஆட்சியில் அமரும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார். 

Tags:    

Similar News