தமிழ்நாடு செய்திகள்

உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது- செங்கோட்டையன்

Published On 2025-11-09 10:41 IST   |   Update On 2025-11-09 10:41:00 IST
  • ஜெயலலிதா தனது நகை, பொருட்களை வழங்கி கட்சியை வலிமைப்படுத்தினார்.
  • அதிமுகவில் இருந்து பலர் நன்றி மறந்து சென்றுவிட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. என்ற இயக்கம் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களால் வளர்த்த இயக்கமாகும். பல்வேறு தியாகங்கள் செய்து தான் அவர்கள் இந்த இயக்கத்தை வளர்த்தனர். பல பேர் நன்றி மறந்து சென்றுவிட்டனர்.

ஜெயலலிதா மன்னிக்கும் தன்மை படைத்தவர். 1989-ம் ஆண்டு தனது நகை, பொருட்களை வழங்கி கட்சியை வலிமைப்படுத்தினார். உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது. ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பயணித்து வருகிறேன். தொண்டர்களை காக்க என்ன செய்ய வேண்டுமோ அந்த பணியை அவர் செய்து வந்தார்.

விரைவில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற அடிப்படையில் நான் 45 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். நான் இளவரசர் போல இல்லை. எளிமையாக தான் இருந்து வருகிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News